வன்னியர் சங்க தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல வந்த மர்ம கும்பல்... கும்பகோணம் பாமக பிரமுகர் அதிரடி கைது...

கும்பகோணம் அருகே பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு

வன்னியர் சங்க தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல வந்த மர்ம கும்பல்... கும்பகோணம் பாமக பிரமுகர் அதிரடி கைது...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அடுத்த மருத்துவ குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார்.
ம.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் கொலை செய்வதற்காக வந்தபோது போலீசார்  அந்த கும்பலை பிடித்தனர்.  இந்த கொலைக்கு, தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி லாலி மணிகண்டனை போலீசார் கடந்த 24 நம் தேதி திருவிடைமருதூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
லாலி மணிகண்டன் போலீசாரிடம், ம.க.ஸ்டாலினை கொலை செய்வதற்கு பாமக மாநில துணை செயலாளரும், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கட்ராமன்(42) உடந்தையாக இருந்ததாக கூறினார். 
 
இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார் வெங்கட்ராமன் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.