திமுகவினர் வெற்றி களிப்பில் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !!

திமுக தொண்டர்கள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர் வெற்றி களிப்பில்  மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து சத்தியமங்கலத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் 18 வார்டுகளும், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 11-வார்டு களிலும், பவானிசாகர் பேரூராட்சியில் 13 வார்டுகளிலும், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் 9 வார்டுகளிலும், கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 9 வார்டுகளிலும்  என திமுக வெற்றி பெற்றுள்ளது.  

இதனை கொண்டாடும் விதமாக வாக்கு எண்ணும் மையத்தின் வெளியில் திமுக தொண்டர்கள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.