நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு... அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்... 

ஆதார் உள்ளிட்ட விவரங்களை சரியாக அளிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.

நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு... அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்... 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என கூட்டுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 

நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, சரியான விவரங்கள் அளித்த பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுப்படி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் 100 சதவீத ஆய்வுக்கு பிறகே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், நகைக்கடன் முறைகேடு நடைபெற்ற மாவட்டங்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் பயனாளிகளின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த பிறகே நகைக்கடன் தள்ளுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.