இங்க கூட செல்பியா..? வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் அலுவலர்கள் செல்பி எடுத்து மகிழும் காட்சி இணையத்தில் வைரல்!!

இங்க கூட செல்பியா..? வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் அலுவலர்கள் செல்பி எடுத்து மகிழும் காட்சி இணையத்தில் வைரல்!!

கொடைக்கானல் நகராட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் அலுவலர்கள் செல்பி எடுத்து மகிழும் காட்சி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.  

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பதிக்கும் பணியானது நேற்று நடைபெற்றது.

இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் பலர் கலந்து கொண்டனர். இதனையெடுத்து அரசு அலுவலர்கள் சின்னம் பதிக்கும் பணியை விட்டு தொலைபேசியில் செல்பி எடுத்து மகிழும் காட்சி சமூகவலைதளத்தில் தற்போது பரவி வருகிறது.