சத்துணவு திட்ட அமைப்பாளர் தற்காலிக பணி நீக்கம்..! அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்..!

சீர்காழி அருகே கொடியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு திட்ட அமைப்பாளர் ராமதேவனை தற்காலிக பணி நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு...

சத்துணவு திட்ட அமைப்பாளர் தற்காலிக பணி நீக்கம்..! அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், சதுப்புநில காடுகள் (மாங்குரோவ் காடுகள்) விரிவாக்கம்  செய்வதற்கான இடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்  லலிதா நேற்று படகில் சென்று ஆய்வு செய்தார். 

அப்போது கொடியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு மதிய நேரத்தில் சென்ற ஆட்சியர், அங்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அந்த உணவின் தரம் திருப்திகரமாக இல்லாததால், சமையலுக்கு  பயன்படுத்தப்படும் பொருட்களை ஆய்வு செய்தபோது துவரம் பருப்பு பூச்சி பிடித்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து விரிவாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் லலிதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் (பொறுப்பு) ராமதேவனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.