அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது ....திருமாவளவன் எச்சரிக்கை...!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித்தவறி பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது  ....திருமாவளவன் எச்சரிக்கை...!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் பேசிய அவர் கூறுகையில்,

பாஜகவினர் அதிமுகவை தடுக்கும் சக்தி முதல்வர் முக ஸ்டாலின் இடம் இருந்தது என்றும் அதனால் அதிமுகவின் வெற்றியை தடுத்து தமிழ் சமூகத்தை காப்பாற்றினார் என கூறினார். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டை பாஜக தான் ஆண்டிருப்பார்கள் என கூறிய அவர், ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற  முடியவில்லை என்றார்.

அதிமுக தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த துரோகத்தால் பாஜக 10 ஆண்டுகளாக வாய் திறந்து பேசுகிறது என்றும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித்தவறி பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அல்லு சில்லுகளுக்கு எல்லாம்  பதில் சொல்வதைத் முதல்வர் தவிர்த்து தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.