திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது - கனிமொழி எம்.பி!

திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது - கனிமொழி எம்.பி!

திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது என திமுக நடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக செயல்வீரர்கள் கூட்டம்:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்றார். இவருடன் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற உழைக்க வேண்டும்:

அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது என்று கூறிய அவர், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: வலுவிழக்கும் மாண்டஸ்...அடுத்த 3 நாட்களுக்கு மழையாம்...!

திமுகவை வீழ்த்த வேறு யாராலும் முடியாது:

அதன்பின் பேசிய கனிமொழி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது எனக் கூறினார். மேலும் திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக, திராவிட இயக்கமாக இல்லை எனவும், மருத்துவம், பொறியியல் என  எல்லாவற்றிலும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்த பாஜகவுடன் கைகோர்த்துள்ளதாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது எனவும், திமுகவை எதிர்த்து வெற்றி பெற யாராலும் முடியாது எனவும் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.