தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை......!!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை......!!

தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன ஆலோசனை மேற்கொண்டார்..

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மருத்துவக்கல்வி இயக்குனர், பொது சுகாதாரத்துறை இயக்குனர்,மருத்துவ நிபுணர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்..

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,ஓமிக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், தொற்று அதிகரித்தால் பணியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு மேலும் நீட்டிப்பு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேலும், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் பயணில்லை என்றும், பொது இடங்களான வணிக வளாகங்கள், மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கடுமையாக்கவும், அபராதம் வசூலிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓமிக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கவும் என திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிப்படுத்துவது குறித்த வழிக்காட்டுதல்கள் முறைப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், ஓமிக்கிரான் தொற்று வேகமாக இருக்கும் நிலையில், இறப்பு விகிதம் குறைவாக இருப்பினும், தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்