நடராஜர் கோவில் உண்மைத்தன்மையை அறிய விசாரணை குழு - தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்மைத்தன்மையை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

நடராஜர் கோவில் உண்மைத்தன்மையை அறிய விசாரணை குழு - தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் இழிவான முறையில் கூறிய  கருத்து  உலக அளவில் அரசியல் தளத்திலும்  பொருளாதார தளத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதி உள்ளதாக தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பேசிய அவர் தமிழ்நாடு அரசு  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அல்லது சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து அதன் அடிப்படையில் உண்மை தன்மையை அறிய வேண்டும்  என்றார்.

முன்னதாக GREY MAGIC CREATIONS  முதன்முதலாக தயாரிக்கும்  புதிய படத்திற்கான துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில்  நடைபெற்றது . அறிமுக இயக்குனர் அலெக்ஸ் தயாரிக்க இருக்கும் இத்திரைப்பட விழாவில்  திருமாவளவன் கலந்துகொண்டு விழாவை  தொடங்கி வைத்தார்.