என்னை பற்றி கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை..... ஏ.கே. செங்கோட்டையன்

பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே தமிழக அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதற்கு, என்னை பற்றி கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை என முன்னாள் அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை..... ஏ.கே. செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், 

பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே தமிழக அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு என்னை பற்றி கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை எனவும்

நான் பேசியது கருத்துகளே தவிர , யாரையும் நான் புகழ்ந்து பேசவில்லை, அவருக்கு தெரிந்தால் படித்து தெரிந்து கொள்ளட்டும் என்றார்.

எந்த காலத்திலும் நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் செய்த சாதனைகளை பற்றி மட்டுமே பேசி உள்ளேனே தவிர இவர்கள் சொன்னது போன்று இல்லை. இவர்கள் வேண்டுமானல்  இடத்திற்கு தகுந்தாற் போல மாறலாமே தவிர எங்களிடம் அந்த நிலை இல்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா குறித்து ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் கூறிய கருத்துக்கு நான் எந்த கருத்தையும் வெளியிட தயாராக இல்லை என்று தெரிவித்தார்.