மதம் மாறிய பிள்ளைகள்....கடுப்பான அப்பா கோடிக்கணக்கான சொத்தை முருகனுக்கு காணிக்கை கொடுத்த சம்பவம்! 

பிள்ளைகள் மதம் மாறிய காரணத்தால் அவருடைய சொத்தை முருக பெருமானுக்கு காணிக்கையாக்கி உள்ளதாக முருக பக்தர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.  

மதம் மாறிய பிள்ளைகள்....கடுப்பான அப்பா கோடிக்கணக்கான சொத்தை முருகனுக்கு காணிக்கை கொடுத்த சம்பவம்! 

பிள்ளைகள் மதம் மாறிய காரணத்தால் அவருடைய சொத்தை முருக பெருமானுக்கு காணிக்கையாக்கி உள்ளதாக முருக பக்தர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.    

இது குறித்து அவர் கூறும் போது, தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், மூன்று பிள்ளைகளும் திருமணமாகி நல்ல அரசு பணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

 தன்னுடைய மூன்று பிள்ளைகளும் மதம் மாறிய காரணத்தால் அவர்களுடைய குல தெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கி உள்ளதாகவும் ,அந்த சொத்தின் மதிப்பு கிட்டதட்ட ரூ.2 கோடி என்றும் தெரிவித்துள்ளார். 

இவரும் இவருடைய மனைவியும் 2 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை காணிக்கையாக அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய மூன்று பிள்ளைகளும் தன் பேச்சை கேட்காத காரணத்தினால், தான் சுயமாக சம்பாதித்த சொத்தை கோயிலுக்கு தானமாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து பேசிய அவர்,  தான் சுயமாக சம்பாதித்த சொத்தினை தானம் வழங்க தனக்கு முழு உரிமையும் உள்ளதாகவும் ,கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்த திருக் கோவிலில் உள்ள மண்டபத்தில் தனது சொத்தை முருகனுக்குக் காணிக்கையாக கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்