பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் தொடக்கத்தில் தொடங்க உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை மழை கிடைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதே நிலையில் இந்த ஆண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா,நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில்சேதங்கள் ஏற்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வடக்கிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணியும் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.