செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள்... முக்கியப்பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்!!

செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள்... முக்கியப்பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்!!

செம்பரம்பாக்கம் ஏரியின் பராமரிப்பு பணி காரணமாக, வரும் 31, 1ம் தேதிகளில், சென்னையின் சில பகுதிகளில், குடிநீர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 31 மற்றும் 1-ஆம் தேதிகளில் சென்னையில் சில பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூர் , அடையாறு, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையாக குடிநீர் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிக்க || சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!