மேகதாது விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்...

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக, சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

மேகதாது விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்...

கர்நாடகவில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதால், அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இருப்பினும், கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மேகதாது அணை தொடர்பாக விவாதிப்பதற்கான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில், தி. மு.க, அ.தி. மு.க, காங்கிரஸ், பா.ம.க, பா.ஜ.க, ம.தி. மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.