அதிமுக சார்பில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம்..!

அதிமுக சார்பில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம்..!

சேலம் மாவட்டம் சிறுவாச்சூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இதனைதொடர்ந்து சிறைப்புரையாற்றிய அவர், விவசாயம் என்பது சாதாரண பணி அல்ல, ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கின்றவர்கள் விவசாயிகள் என்றும்,  அதிமுக ஆட்சியில் 50 கோடியில் சிறுவாச்சூர் ஏரி புனரமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அந்த திட்டம் நிறைவேறினால் எட்டு கிராமங்கள் பயன்பெறுமெனவும் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பல மாநிலங்களில் டீசல் விலை குறைத்த போதிலும் தமிழ்நாட்டில் குறைக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.