தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி...5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா...அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி...5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா...அமைச்சர் சொன்ன தகவல்!

மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோயில் சார்பில் மகாசிவராத்திரி விழா நடைபெறவுள்ள  இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படிக்க : ஈரோடு : அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக... ஜி.கே.வாசன் பேச்சு!

அப்போது பேசிய அவர், மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டி உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் , தஞ்சை பெரிய கோயில், கோவை பட்டீஸ்வரர் கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயில் ஆகிய 5 கோவில்களில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி  சிவராத்திரி விழா நடைபெறவுள்ளதாக  கூறினார்.

இந்த விழாவில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஸ்டால்கள், கண்காட்சி, சொற்பொழிவு, பட்டிமன்றங்கள், ஆடல் பாடல் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.