மொட்டை மாடியில் சட்டவிரோதமாக மதுபான பார்.. வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!!

மொட்டை மாடியில் சட்டவிரோதமாக மதுபான பார்.. வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!!

மொட்டை மாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடரப்பட்ட வழக்கு:

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மொட்டை மாடியில் இருந்து ஒருவர் போதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் இந்த பார்களில் மதுபானங்கள் தவிர போதைப் பொருட்கள், ஹூக்காக்கள் உபயோகிக்கப்படுவதாகவும், இதனால் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

விசாரணைக்கு வந்த வழக்கு:

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதற்கு அபராதம் விதிக்க போவதாக நீதிமன்றம் எச்சரித்ததை அடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் ஒப்புக்கொண்டார். இதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.