எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம் : ஈபிஎஸ்-ஓபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை...
எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி. ஆரின் 34 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது நினைவிட வளாகத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக உணவு உறக்கமினன்றி உழைக்க வேண்டும் என சூளுரைத்து ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.