ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 கோடிக்கு மது விற்பனை..!

ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் 4 கோடியே 17 லட்சத்திற்கு மது விற்பனையானது.

ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 கோடிக்கு மது விற்பனை..!

நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.  ஒவ்வொரு நாளும் மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில்  ரூ.1.5  கோடி முதல் ரூ.2.5 கோடி வரை மது விற்பனை சராசரியாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய  நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகமான மது விற்பனை நடைபெறும்.

அதன்படி, இந்த ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக மதுபிரியர்கள் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர்.  குறிப்பாக, நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் மது விற்பனை படுஜோராக இருந்தது.

அந்த வகையில் ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஓரே நாளில் ரூபாய் 4 கோடியே 17 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ரூ.148 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.