பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு...! 2 - வது நாளாக போக்குவரத்து பாதிப்பு..!

பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டாவது நாளாக போக்குவரத்து பாதிப்பு.. சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறையினர்...!

பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு...! 2 - வது நாளாக போக்குவரத்து பாதிப்பு..!

திண்டுக்கல் மாவட்டம்  பழனி - கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக, பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைசாலையில், 13வது கொண்டை ஊசி வளைவு அருகில் சவரிகாடு என்ற இடத்தில் நேற்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. தொடர் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இரண்டாவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

விடுமுறை காரணமாக அதிக அளவில் கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், ஊர் திரும்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து பாதிக்கபட்டுள்ள இடத்தில் இரண்டாவது நாளாக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மணல் மூட்டைகளை வைத்து முதல் கட்டமாக  சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக பழனி - கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.