கொடநாடு வழக்கு; இன்று அறிக்கை சமர்ப்பிப்பு ..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.

இதுகுறித்து, சிபிசிஐடி போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பான முழு தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை  ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில்  சிபிசிஐடி போலீசார் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து  அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.

இதையும் படிக்க   | லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2 வது நாளாக அமலாகத்துறை சோதனை!!