கார்த்திகை தீபத் திருவிழா- 5-ம் பிரகாரத்தில் வலம் வந்த பஞ்சமூர்த்திகள்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி, 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழா- 5-ம் பிரகாரத்தில் வலம் வந்த பஞ்சமூர்த்திகள்...

திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, முதல் நாளான இன்று திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அண்ணாமலையார் உட்பட பஞ்ச மூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயிலின் ராஜகோபுரம் அருகேயுள்ள ஐந்தாம் பிரகாரத்தில்  விநாயகர், முருகர்,  அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள்  தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக  ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.