இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்...

உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது தேர்தல் பிரசாரத்தை இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்...

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அடுத்த மாதம்  6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை உள்ளாட்சி-உரிமைக்குரல் இன்று காஞ்சிபுரத்தில் ஒலிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.