தனியார் பள்ளி மாணவிகளை மிஞ்சிய அரசு பள்ளி மாணவிகள்!!!

குமாரபாளையத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் தனியார் பள்ளி மாணவிகளை விட அதிக பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.

தனியார் பள்ளி மாணவிகளை மிஞ்சிய அரசு பள்ளி மாணவிகள்!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்விதுறை சார்பில் வட்டார அளவிலான மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இதில் 84 பள்ளிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 14,17, 19 வயதின் கீழ் இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடெரர்!!!

அதில் ஈட்டி, குண்டு, வட்டு எறிதல் மற்றும் நீளம், உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை ஓட்டப் பந்தயம் என நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், அரசு பள்ளி மாணவிகள், தனியார் பள்ளி மாணவிகளை விட சிறப்பாக விளையாடி முதல் இடங்களை தட்டிச்சென்றனர்.

மேலும் படிக்க | நீங்க நடையா நடங்க! நாங்க பைக்-ல சுத்தறோம்!!!- காங்கிரசுக்கு போட்டியாக பாஜக!!!

மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வெற்றி கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.