பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதியாகவில்லை...அறிக்கை வெளியிட்ட வைகோ!

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதியாகவில்லை...அறிக்கை வெளியிட்ட வைகோ!

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதியாகவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேசிய அவர், சிங்கிளர்கள் பிடியில் இருந்த ஈழதமிழர்களை காப்பாற்றுவதற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் குடும்பத்துடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், அவர் விரைவில் வெளியே வருவார் எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தொடர்ந்து, இது குறித்த அறிக்கையையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார். 

இந்நிலையில் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13. 02.2 023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பிரபாகரன் உயிருடன் இருந்தால் நானே நேரில் செல்வேன் - கே.எஸ்.அழகிரி!

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். அப்படி என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. 

ஆனாலும், அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.