"இந்தியாவும் இலங்கை போல் மாற வாய்ப்பு" - திமுக மக்களவைத் தலைவர் டிஆர் பாலு

"இந்தியாவும் இலங்கை போல் மாற வாய்ப்பு" - திமுக மக்களவைத் தலைவர் டிஆர் பாலு

விஷம் போல் ஏறும் விலைவாசி:

விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வால் இந்தியாவும் இலங்கை போல் மாற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக மக்களவைகுழுத் தலைவர் டிஆர் பாலு எச்சரித்துள்ளார்.

திமுக எம்பிக்கள் வெளிநடப்பு:

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அளித்தும் அனுமதி அளிக்கப்படவில்லை என  கூறி திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

டிஆர் பாலு:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஆர் பாலு, பொறுப்புணர்வை மறந்து எம்பிக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு மறுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.  

15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன், வேலைவாய்ப்பை வாரி வழங்குவேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் தற்போது வாய் திறக்காமல் இருப்பதாவும் அவர் சாடினார். இந்தியாவில் பட்டினிச்சாவு அதிகரிக்கும் என எச்சரித்த அவர், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இலங்கையைப் போன்றே இந்தியா மாற வாய்ப்புள்ளதாக  கூறினார்.