திருவாரூரில் இன்று கலைஞர் கோட்ட திறப்பு விழா!

திருவாரூரில் இன்று கலைஞர் கோட்ட திறப்பு விழா!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியியை நினைவு கூறும் விதமாக தமிழ்நாடு அரசால் கட்டியமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா இன்று திருவாரூரில் நடைபெற உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் "கலைஞர் நூற்றாண்டு விழா"வை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘கலைஞா் கோட்டம்’ மற்றும் முத்துவேலா் நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இதன் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாா், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். 

இதனிடையே திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது புதியதாக கட்டி முடிக்கப்பட்ட  கலைஞர் கோட்டத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.  இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

முன்னதாக திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க:''நடிகராக இருப்பதால், அரசியலுக்கு வர முழு தகுதியும் வந்து விடாது'' கவிப்பேரரசு வைரமுத்து கருத்து!