மழையால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

மழை மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.

மழையால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். 

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி பெய்த கனமழையால், பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி செல்கிறார். மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக, பிற்பகல் 1 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து காரில் சென்றபடி வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளார்.