யாராவது அதிமுகவை அழிக்க நினைத்தால்...இறுதியில் அது கானல் நீராகவே முடியும்!

யாராவது அதிமுகவை அழிக்க நினைத்தால்...இறுதியில் அது கானல் நீராகவே முடியும்!

வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வருவதற்கு வாய்ப்புள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சாலை மார்க்கமாக சொந்த ஊரான சேலம் சென்றார். அப்போது, விழுப்புரத்தில் மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி வி சண்முகம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : ரபேல் வாட்ச் பில்க்கு அடுத்த தேதியை குறித்த அண்ணாமலை...!

அப்போது அதிமுக தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுவேன் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து  எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்று கூறினார்.

பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சியான அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் என்று பேசினார். அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து  போவார்கள் என்றும் அதிமுகவை அழிக்க நினைப்பது  கானல் நீராக முடியும் என்றும் கூறினார்.