அருங்காட்சியக சிலை குறித்து தகவல் அளித்தால் கோவிலில் வைக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து தகவல் அளித்தால், சிலைகளை கோயில்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியக சிலை குறித்து தகவல் அளித்தால் கோவிலில் வைக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து தகவல் கொடுக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கோவில்களில் அந்த சிலைகளை வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு காரமடை காரை அரங்கன் வழிபாட்டு குழுவினரால் தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஜமீன் காலத்தை போல் கோவில்களுக்கு பலரும் நன்கொடை வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும், 3. 5 லட்சம் சிலைகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது என்று முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கருத்தை சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.