Mr Miss & Mrs தமிழகம் 2022 போட்டி.. சிங்கப்பூரிலிருந்து மனைவிக்கு சர்ப்ரைஸ் தர வரும் கணவர்!!

Mr Miss & Mrs தமிழகம் 2022 போட்டியில் பங்கேற்க உள்ள தனது மனைவியை  ஊக்கப்படுத்த சர்ப்ரைஸாக சிங்கப்பூரிலிருந்து அவரது கணவர் வருகை தரவுள்ளார்.

Mr Miss & Mrs தமிழகம் 2022 போட்டி.. சிங்கப்பூரிலிருந்து மனைவிக்கு சர்ப்ரைஸ் தர வரும் கணவர்!!

Mr Miss & Mrs தமிழகம்  2022  நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியன் மீடியா ஒர்க்ஸ்  நிறுவனம் நடத்துகிறது.
 
இந்த நிகழ்ச்சியில்  அபர்ணா  என்பவர் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக அவரது கணவர் ஆனந்த கிருஷ்ணன் சர்ப்ரைஸாக சிங்கப்பூரில் இருந்து வருகை தர உள்ளார்.

Mr miss & Mrs தமிழகம் 2022 போட்டியில் பங்கேற்கவுள்ள அபர்ணாவின் கணவர் ஆனந்த கிருஷ்ணன்  பதிவிட்டுள்ள வீடியோவில் தான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதாகவும் தனது மனைவி Mr Miss & Mrs தமிழகம் 2022 போட்டியில் பங்கேற்க உள்ளார். அவரை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து சர்ப்ரைஸாக வருகை தர உள்ளதாக தெரிவித்தார்.

இதுபோன்று மனைவியின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு கணவரும் முன்னின்று அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.