7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை...

கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை...

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் மழைநீரால் மூழ்கடித்தபடி காட்சியளிக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.