தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு, தேனி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.