மக்களே உஷார்...வருகிற 21...திருச்சி, செங்கல்பட்டு...உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

மக்களே உஷார்...வருகிற 21...திருச்சி, செங்கல்பட்டு...உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வரும் 21ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு மழை:

கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், வரும் 20ம் தேதி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க: மதிமுக நிறைவேற்றிய 7 தீர்மானங்கள்...ஆளுநர் குறித்த 3வது தீர்மானம் சொல்வது என்ன?

கனமழைக்கு வாய்ப்பு:

அதைத்தொடர்ந்து, வரும் 21ம் தேதி திருச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.