சிதம்பரம் தீக்ஷீதர்களுக்கென எனத் தனி சட்டம் வகுத்து தந்துளாரா?.... - ஆளுநரிடம் அமைச்சர் சேகர் பாபு கேள்வி.

ஆளுநர் என்பவர் ஆண்டவரா?.... எங்களை பொறுத்தவரை ஆளுநர் நாட்டிற்கு தேவை இல்லை.....

சிதம்பரம் தீக்ஷீதர்களுக்கென எனத்  தனி சட்டம் வகுத்து தந்துளாரா?.... - ஆளுநரிடம்  அமைச்சர் சேகர் பாபு கேள்வி.

சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலாங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்,..   

கொளத்தூர் -  வில்லிவாக்கம் பகுதியை இணைக்கும் LC 1 மேம்பாலமானது,  சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து  71 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதோடு, இந்த பாலத்தை அமைக்க 10 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்துள்ளார் என்வும், அதையடுத்து இந்த பாலம் வருகிற  13 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது எனது தெரிவித்தார். மேலும், ஸ்டீபன்சன் பாலம் 2 ஆண்டுகளில் முடிக்க  வேண்டும் என முதல்வர் சொன்னது மட்டும் இல்லாமல் மூன்று முறை ஆய்வு செய்துள்ளார் என்றும், ஒரு மாதத்தில் இந்த பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். 

அதோடு, அண்ணாமலை கர்நாடக வெயிலில் காய்ந்துகொண்டு, ஏதோ சொல்ல வேண்டும் என தொடர்ச்சியாக கூறிக்கொண்டே  வருகிறார் என்றும், தான் புதிய கார் ஒன்றை  பயன்பாட்டிற்கு வாங்கியதாக சொன்னதாகவும், தற்போது, மாற்றி பேசி வருவதாகவும்,  அதில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை,என கூறினார். அதோடு, கோவில் நிர்வா கத்திற்கு மட்டுமே கார் வாங்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

தொடர்ந்து, வெறும் நான்கு ஆயிரம் ஏக்கர் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது என ஆளுநர் கூறினார், ஆனால் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது. அதேபோல ரேவர் கருவி மூலம் நிலம் அளவீடும் பணி நடைபெற்று வருகிறது.  இதன் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.இதற்காக அரசை ஆளுநர் பாராட்ட வேண்டும்.  இன்னும் சொல்ல போனால் இந்து சமய அறநிலையத்துறை இடங்களை கைப்பற்றப்பட்டதில் ஆக்கிரமிப்பு செய்தவர்களில் 6 பேர் பாஜக நிர்வாகிகள் தான்",  என்றும்  கூறினார். 

ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை சட்ட மீறல் ,விதிமிறல் நடந்தால் அது சிதம்பரம் தீக்ஷீதர்கள் என்றால் அவர்கள் மீது அந்த சட்டம் பாயக்கூடதா?சிதம்பரம் தீக்ஷீதர்கள் என தனி சட்டம் வகுத்து தந்துளாரா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது ஆகவே விதிமீறல் எங்கு நடைப்பெற்றாலும் அங்கு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் என்பவர் ஆண்டவரா? எங்களை பொறுத்தவரை ஆளுநர் நாட்டிற்கு தேவை இல்லை என்றார். 

இதையும் படிக்க      }   குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை...சிறுமியை சாட்சிக்கு அழைக்கும் ஆளுநர் - மா.சுப்பிரமணியன் பேட்டி!

மேலும், "ஆளுநர் முதல்வரை பாராட்டி உள்ளார்; ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக இது போன்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார்.  இதனை முதல்வர் எதிர்கொள்வார்" என்றும், திராவிட மாடலை கர்நாடக தேர்தலில் பாஜக பயன்படுத்தி வருகிறது,காலவாதி ஆகப்போவது ஆளுநர் பதவியும் அவர் முன் நிறுத்தும் இயக்கமும் மட்டுமே திராவிட மாடல் அரசு நாட்டிற்கு எடுத்துக்காட்டான அரசு உள்ளது எனத்  தெரிவித்தார்.

இதையும் படிக்க      }   தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் குறித்து இறையன்பு கருத்து...