முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை ஒப்படைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.

முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை ஒப்படைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, கடந்த 2014-ம் ஆண்டு, அதிமுக சார்பில் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கக் கவசம் வழங்கப்பட்டது.

மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த தங்க கவசம், ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு முன்னதாக எடுத்து, நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, தேவரின் 114-வது ஜெயந்தி விழா வருகிற 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம், வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று, நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் வழங்கினார். விழா முடிந்த பின்னர் மீண்டும், நவம்பர் 1-ம் தேதி தங்க கவசம் மீண்டும் வங்கியில் வைக்கப்படும்.