அரை மணி நேர போராட்டம்.. மரங்கொத்தி பறவையை விழுங்க முயன்ற பாம்பு.. விழுங்கிச்சா? இல்லையா?

கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று மரங்கொத்தி பறவையை விழுங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரை மணி நேர போராட்டம்.. மரங்கொத்தி பறவையை விழுங்க முயன்ற பாம்பு.. விழுங்கிச்சா? இல்லையா?

நெல்லை மாவட்டம், பணகுடி காவல் நிலையம் எதிரே உள்ள காலி இடத்தில் சுற்றித்திரிந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று மரங்கொத்தி பறவையை விழுங்க முயன்றது. சுமார் அரை மணி நேரம் போராடியும் பாம்பால் விழுங்க முடியாததால் மரங்கொத்தி பறவையை அங்கேயே விட்டுச்சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பரப்பினர்.