”ஆளுநர் வெளிநடப்பு அப்பட்டமான மரபு மீறல்”...கனிமொழி விமர்சனம்!

”ஆளுநர் வெளிநடப்பு அப்பட்டமான மரபு மீறல்”...கனிமொழி விமர்சனம்!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது அப்பட்டமான மரபு மீறல் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சமத்துவ பொங்கல்:

சென்னை ராயபுரம் பகுதியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாநில மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார்.

இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்...ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

எதிர்க்கட்சி போல் செயல்படுகிறார்:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். பொதுவாக சட்டப்பேரவையில் இருந்தும், நாடாளுமன்றத்தில் இருந்தும் எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து எதிர்கட்சி போன்று செயல்படுகிறார் என்பதை தான் காட்டுகிறது என விமர்சித்தார். 

ஆளுநர் செய்தது மரபு மீறல்:

தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது அப்பட்டமான மரபு மீறல் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.