விவசாய கிணற்றில் மூழ்கி அரசு பள்ளி மாணவர் உயிரிழப்பு..!
திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மூழ்கி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா, காஞ்சிபாடி கிராமத்தில் விவசாயி மணி என்பவரது விவசாய கிணற்றில் யோக வேல் என்ற மாணவன் அவரது நண்பர்களுடன் இந்த கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென அந்த மாணவன் யோகவேல் நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரிந்த மாணவன் யோகவேல் நீரில் மூழ்கியதை கண்டவுடன் அவரது சக நண்பர்கள் கூச்சல் இட்டுள்ளனர்,
பின்னர், அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற வருவதற்குள் நீரில் மூழ்கியுள்ளான். உடனடியாக திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மாணவனின் உடலை 8 மணி நேரத்திற்கு மேலாக போராடி வீரர்கள் மீட்டனர். மேலும் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருவதாக கனகம்மாசத்திரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.....