செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு... பள்ளிக்கு வராமல் இருக்கலாமா? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு... பள்ளிக்கு வராமல் இருக்கலாமா? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

தமிழ்நாட்டில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

 50% மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்

  • வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும்
  • ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டும்
  • ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும்
  • வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் சேராமல் தடுத்தல் போன்றவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்
  • பயோமெட்ரிக் வருகைப் பதிவேடை பயன்படுத்தக் கூடாது

  • ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
  • விளையாட்டு, இறைவணக்கக் கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது
  • கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளை திறக்கக் கூடாது
  • பெற்றோர்கள் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது
  • குளிர்சாதனத்தை பயன்படுத்தக் கூடாது
  • வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது
  • திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம்
  • மாணவர்களின் மனநலன், உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழு நேரமாக பள்ளியில் இருக்க வேண்டும்
  • அறிகுறி உள்ள மாணவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக தனி அறை வசதி இருக்க வேண்டும்
  • சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகளில் நடமாடும் சுகாதார முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
  • பள்ளிப் பேருந்துகள், வேன்கள், விடுதிகளிலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்

மேற்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்கலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.