முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் தாயார் காலமானார்!!!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் தாயார் காலமானார்!!!

சென்னையில் இருந்த பன்னீர்செல்வம் தாய் இறந்த தகவல் கிடைத்ததும் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.  அவரது தாயாரான பழனியம்மாளின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் வெள்ளிக்கிழமை காலமானார்.  பழனியம்மாள் தனது 95வது வயதில் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

ஓபிஎஸ்ஸின் தாயார் நேற்று மாலை காலமானதாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் இருந்த பன்னீர்செல்வம் தாய் இறந்த தகவல் கிடைத்ததும் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.  அவரது தாயாரான பழனியம்மாளின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   காவலர் கொல்லப்பட்ட வழக்கு.... ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!!!