ஆர்ப்பரித்து கொட்டும் கும்பக்கரை அருவி...

மேற்கு தொடர்சி மழைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்ப்பரித்து கொட்டும்  கும்பக்கரை அருவி...

மேற்கு தொடர்சி மழைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலை பகுதியில் தென் மேற்கு பருவ மழை துவங்கியது முதல் போதிய மழை பொழிவு பெய்யாது போனதால் அருவிக்கு வரும் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக கும்பகரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலை மற்றும் வட்டக்கானல் பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள விவசாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் தொடர்ந்து தடையில் உள்ளது.