அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி...

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை உயிரிழந்தது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் வனச்சரகம் உள்ளது. இன்று அதிகாலை  ஆசனூர் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற  ஆசனூர் வனத்துறையினர், சிறுத்தையின் உடலை கைப்பற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்த விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இறந்த சிறுத்தை இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என தெரிவித்த வனத்துறையினர், சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட உள்ளதாக கூறினர்.