தமிழக அரசின் நயா பைசா பட்ஜெட்: சோப்பு நீர் குமிழிகளை காற்றில் பறக்கவிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்!

தமிழக அரசின் நயா பைசா பட்ஜெட்: சோப்பு நீர் குமிழிகளை காற்றில் பறக்கவிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்!

வந்தவாசியில் அரசின் வேளாண் பட்ஜெட்டை கண்டித்து விவசாயிகள் சோப்பு நீர் குமிழிகளை காற்றில் விட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாய குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டால் தங்களுக்கு எந்த நன்மையும் இல்லை என புகார் தெரிவித்தனர். 

இதையும் படிக்க : வயநாடு சென்ற ராகுல், பிரியங்கா...வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

மேலும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் காற்றில் பறக்கும் நீர்குமிழ் போல உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வகையில், நீர் குமிழிகளை காற்றில் பறக்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது நயா பைசா பட்ஜெட்டை அறிவித்த தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.