வயநாடு சென்ற ராகுல், பிரியங்கா...வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

வயநாடு சென்ற ராகுல், பிரியங்கா...வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தனது , வயநாடு தொகுதிக்கு வந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், ஜாமீனையும் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, வயநாடு தொகுதியின் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிக்க : களவாடப்படும் தடுப்பு வேலிகள்... அதிகாரிகளுக்கு தொடர்பா? குற்றம் சாட்டும் பொதுமக்கள்!

இதனைத்தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையிலும், பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும், எம்பியாக பதவி வகித்த வயநாட்டிற்கு ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் இருவரும் சென்ற நிலையில், வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். 

எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின் முதன் முதலாக வயநாட்டிற்கு சென்றுள்ளார். இருப்பினும் அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.