மாணவிக்கு உச்சகட்ட ஆபாச மெஸேஜ்... வாட்ஸாப்பில் வீடியோ கால் கேட்டு தொல்லை!! - காலேஜ் வாத்தியின் லீலைகள்....!

*மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்*

மாணவிக்கு உச்சகட்ட ஆபாச மெஸேஜ்... வாட்ஸாப்பில் வீடியோ கால் கேட்டு தொல்லை!! - காலேஜ் வாத்தியின் லீலைகள்....!

சென்னை கோயம்பேடு தூய தாமஸ் சாலையில்  தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருக்கக்கூடிய தமிழ்செல்வன் என்பவர்  படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதனைதொடர்ந்து பேராசிரியரான தமிழ்செல்வனை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று கல்லூரியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உடனடியாக பேராசிரியர் தமிழ்செல்வனை கல்லூரியில் இருந்து நீக்கி கல்லூரி முதல்வர் தங்கவேல் உத்தரவிட்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சி.எம்.பி.டி காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து இன்று திடீரென கல்லூரிக்கு வெளியே வந்த பேராசிரியர் தமிழ்செல்வனை உடனடியாக கைது  செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுவடைந்ததால் கல்லூரியின் முதல்வர் தங்கவேலு சி.எம்.பி.டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பேராசிரியர் தமிழ்செல்வன் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பேராசிரியரின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட தமிழ்செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேராசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.  மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அவர்களின் தகவல் ரகசியமாக காக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.