அமைச்சர் துரைமுருகனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் துரைமுருகனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கடந்த செப்டம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரை துரோகி என விமர்சித்து இருந்த விவகாரம் அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் எம். ஜி.ஆர் மன்றம் சார்பில்   துரைமுருகனே யார் துரோகி? என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.