எடப்பாடி ரைபிள் கிளப் மாணவர்களின் உலக சாதனை...!

தமிழ்நாடு ஏர்கன்(AirGun)அசோசியேஷனின், எடப்பாடி ரைபிள் கிளப் மாணவர்கள் எடப்பாடியில் 7 நிமிடத்தில், 150 பாட்டில்களை துப்பாக்கியால் சுட்டு உலக சாதனை செய்து அசத்தியுள்ளனர்.

எடப்பாடி ரைபிள் கிளப் மாணவர்களின் உலக சாதனை...!

தமிழ்நாடு ஏர்கன்(AirGun) அசோசியன் சார்பில் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி எஸ்.கே.டி. பள்ளியில் எடப்பாடி ரைபிள் கிளப் மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கில், 150 பாட்டில்களை 7 நிமிடத்தில் சூட்டிங் செய்து அசத்தியுள்ளனர். முன்னதாக யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 80 நிமிடத்தில் 2022 பேலட் சூட்டிங் செய்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ரைபிள் கிளப் மாணவர்கள் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை செய்தனர்.

தற்போது 7 நிமிடத்தில் 150 பாட்டில்களை சூட்டிங் செய்து உலக சாதனை புரிந்துள்ளனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்து பரிசுகள், கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். அப்போது எடப்பாடி ரைபிள் கிளப் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.