முல்லைப்பெரியாறு அணையை நேரில் சென்று பார்த்தார்களா..? அமைச்சர் துரைமுருகன் கேள்வி...
பத்து வருடமாக ஆட்சியில் இருந்த பொதுபணித்துறையை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் முல்லைப்பெரியாறு அணையை நேரில் சென்று பார்த்தார்களா என நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் வினவியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முல்லைப் பெரியாறு தொடர்பான அதிமுக போராட்டம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பத்து வருடமாக ஆட்சியில் இருந்த அந்த துறையை சார்ந்தவர்கள் முல்லைப்பெரியாறு அணையை நேரில் சென்று பார்த்தார்களா என கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து கார் மூலம் தேனிக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன், அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் துரைமுருகள் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளனர்.