அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதல்...அரசு விழாவில் பரபரப்பு!

அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதல்...அரசு விழாவில் பரபரப்பு!

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதிக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையத்தை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். 

இதையும் படிக்க : புதுக்கோட்டை: விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் ஐயனார் கோயில்... !

இதற்கு முன்னர், ரிப்பன் வெட்டுவதற்காக தாட்கோ தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோரை தனது அருகில் வருமாறு அமைச்சர் அழைத்தார். அப்போது, நான் தான் கட்சியின் சீனியர் எனக் கூறி தாட்கோ தலைவர் மதிவாணன், மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அமைச்சர் மெய்யநாதன் ரிப்பன் வெட்டியதும் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கெளதமன் அந்த இடத்தில் இருந்து ஒதுங்கி நின்றார்.

இதையடுத்து குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் ஒதுங்கி நின்ற கௌதமனை அமைச்சரும் மாவட்ட ஆட்சியரும் சமாதானப்படுத்தி குத்து விளக்கு ஏற்ற வைத்தனர். இருப்பினும், அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.